இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை தொழிலாளர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தினார். தொழிலாளர் அமைப்புகள் EPFO இன் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ஐந்து மடங்கு அதிகரித்து அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை தொழிலாளர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தினார். தொழிலாளர் அமைப்புகள் EPFO இன் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ஐந்து மடங்கு அதிகரித்து அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன. இதனுடன், எட்டாவது ஊதியக் குழுவை உடனடியாக உருவாக்க வேண்டும், 2025-26 நிதி யாண்டுக்கான பட்ஜெட்டில் பெரும் பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளன.
தொழிலாளர் சங்கங்கள், வருமான வரி விலக்கு வரம்பை ஆண்டுக்கு 10 லட்சமாக உயர்த்த வேண்டும், தற்காலிக ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டத்தைக் கொண்டு, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீட்டெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன. தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையத்தின் (TUCC) தேசிய பொதுச்செயலாளர் எஸ்.பி.திவாரி, கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் இது குறித்து பேசினார். அவர், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்றும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பை உயர்த்த பெரும் பணக்காரர்கள் மீது கூடுதல் இரண்டு சதவீத வரி விதிக்க வேண்டும் என்றும் கூறினார். விவசாயத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு மற்றும் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்
EPS ஓய்வூதியம் நிதி அமைச்சர் தொழிலாளர் சங்கங்கள் EPFO
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
குட் நியூஸ்! ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், EPF பங்களிப்பில் மாற்றம்,: ஓய்வூதியத்தை அதிகரிக்க அரசு திட்டம்EPS Pension: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) பணியாளர்களின் ஓய்வூதியத் திட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்ய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தயாராகி வருகிறது.
और पढो »
EPFO முக்கிய மாற்றங்கள் விரைவில்: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், ஓய்வூதியம் அதிகரிக்கும்... தயாராகும் அரசுEPFO Update: தொழிலாளர் அமைச்சகம் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டத்தை மேம்படுத்த மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது. வரும் நாட்களில் பல முக்கிய அறிவிப்புகள் காத்திருக்கின்றன.
और पढो »
EPFO குட் நியூஸ்: அரசின் பரிசு.... ஓய்வூதியம் அதிகரிக்கும், ஊதிய உச்சவரம்பில் ஏற்றம் விரைவில்EPFO Update: ஓய்வூதியத் திட்டத்தை இன்னும் கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்கு தொழிலாளர் அமைச்சகம் பல வித நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
और पढो »
EPFO Update: UAN ஆக்டிவேட் பண்ணிடீங்களா... இல்லை என்றால் சிக்கல்... ஆன்லைனில் எளிதாக செய்யலாம்EPFO Update: பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (ELI) திட்டம் போன்ற EPFO திட்டங்களின் பலன்களைப் பெற UAN எண்ணை ஆக்டிவேட் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது.
और पढो »
EPFO புத்தாண்டு பரிசு: ATM மூலம் பிஎஃப் பணம், எப்போது? அமைச்சகம் அளித்த அட்டகாசமான அப்டேட்EPFO Update: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO அவ்வப்போது சில புதிய விதிகளை அறிமுகம் செய்கின்றது. பழைய விதிகளில் மாற்றங்களையும் செய்கின்றது.
और पढो »
அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் ஜாக்பாட்: பட்ஜெட்டில் 18 மாத டிஏ அரியர் தொகை? எவ்வளவு கிடைக்கும்?7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நீண்ட காலமாக 18 மாத டி அரியர் தொகை குறித்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இது தொடர்பான சமீபத்திய புதுப்பிப்பு ஒன்று கிடைத்துள்ளது.
और पढो »