Tamil Nadu government Pongal Gift | தை பொங்கல் பண்டிகையின்போது ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை யாருக்குமே கிடைக்காது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Tamil Nadu government Pongal Gift | தை பொங்கல் பண்டிகையின்போது ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை யாருக்குமே கிடைக்காது என்ற தகவல் வெளியாகியுள்ளது. Tamil Nadu government Pongal Gift | பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில் அமைச்சர் தா.
மோ. அன்பரசன் அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.தமிழ்நாடு அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த கடன் வாங்கும் நிலையில் இருந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு போதுமான நிதிப்பகிர்வை அளிக்காதது தமிழ்நாடு அரசின் இந்த நிதி நெருக்கடிக்கு மிக முக்கிய காரணமாகும்.அதனால் இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படுமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.இந்த சூழலில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்திருக்கும் கருத்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்க அரசிடம் பணம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.அரசு கஜானாவில் பணம் இல்லாததால் பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. முதலமைச்சர் அதற்காக பணத்தை ரெடி செய்து கொண்டிருக்கிறார் என கூறியுள்ளார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் நடந்த கூட்டத்தில் இந்த கருத்தை அவர் தெரிவித்திருக்கிறார். மேடையில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசும்போது, " அரசு கஜானாவில் பணம் இல்லை. அதனால் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. முதலமைச்சர் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு பணத்தை ரெடி செய்து கொண்டிருக்கிறார். சீக்கிரமே எல்லோருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும்" என தெரிவித்துள்ளார்.அமைச்சர் தா.மோ. அன்பரசனின் இந்த கருத்து பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கும் பொருந்துமே என மக்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது. ஏற்கனவே கலைஞர் உரிமைத் தொகை என்பது தகுதியான பெண்களுக்கு சென்று சேரவில்லை என்ற அதிருப்தி மக்கள் மத்தியில் இருக்கிறது.இந்த சூழ்நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படவில்லை என்றால் கூடுதல் அதிருப்தியை தமிழ்நாடு அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இருப்பினும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்க அதிக வாய்ப்பு இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதற்கான நிதி திரட்டலில் அனைத்து துறைகளும் ஈடுபட்டுள்ளன. போதுமான தொகை அரசு கஜானாவுக்கு வந்தவுடன் உடனடியாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்த அறிவிப்புகள் வெளியாகும். இப்போதைய சூழலில் தமிழ்நாடு கடும் அரசு நிதி நெருக்கடியிலேயே இருக்கிறது. இதே நிலை நீடித்தால் வரும் காலங்களில் சமூக நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்த முடியாத சூழல் கூட உருவாகவும் வாய்ப்பு இருக்கிறது. undefinedTamil Nadu governmentகுழந்தைகளின் மன ஆரோக்கியத்திற்கு முக்கிய ஆதரவை வழங்கும் 8 நடைமுறை பழக்கங்கள்!
₹1000 Pongal Gift Tamil Nadu Tha Mo Anbarasan Pongal Bonus Pongal Festival Cash Announcement 2024 Pongal Gift Fund Shortage Tamil Nadu பொங்கல் பரிசு தொகுப்பு தமிழ்நாடு அரசு நிதிப்பற்றாக்குறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்குமா? பொங்கல் ஆயிரம் ரூபாய் கிடைக்குமா? Tamil Nadu Government Fund Crisis Tamil Nadu Financial Difficulties 2024 Pongal Bonus News Updates Chief Minister DMK Pongal ₹1000 Tamil Nadu Social Welfare Schemes Funding
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பள்ளி மாணவர்களே... மாதந்தோறும் 100 ரூபாய் வேண்டுமா... இந்த தேர்வை எழுதுங்கள் போதும்TN Chief Minister s Aptitude Test: 10ஆம் வகுப்பு பயின்று வரும் 1000 மாணவ-மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் நிலையில், அதற்கான தகுதித்தேர்வை தமிழ்நாடு அரசின் தேர்வுத்துறை தற்போது அறிவித்துள்ளது.
और पढो »
PMEGP லோன் திட்டம் : ரூ.1 கோடி வரை கடன், 35% மானியம்PMEGP கடன் திட்டத்தில் மத்திய அரசு கொடுக்கும் 35% மானியத்துடன் அதிகபட்சமாக ரூ.1 கோடி வரை கடன் பெறலாம்.
और पढो »
ரூ.10 லட்சம் வரை காப்பீடு... மகள் கல்யாணத்திற்கு ரூ.1 லட்சம் - குஷியில் ஆட்டோ டிரைவர்கள்5 Announcements For Auto Drivers: ஆட்டோ டிரைவர்களுக்கு காப்பீடு, அவர்களின் மகள் திருமணத்திற்கு உதவித்தொகை என அரவிந்த் கெஜ்ரிவால் 5 வாக்குறுதிகளை அள்ளிவீசி உள்ளார்.
और पढो »
அரிசி ரேஷன் கார்டு vs சர்க்கரை ரேஷன் கார்டு : யாருக்கு தை மாதம் ரூ.2000 கிடைக்கும்?Tamil Nadu Pongal Gift Pack: தமிழ்நாடு அரசு கொடுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு யார் யாருக்கு எல்லாம் கிடைக்கும் அல்லது கிடைக்காது என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
और पढो »
குறைந்தபட்ச ஓய்வூதியம் அதிகரிப்பு உறுதி: EPFO பரிந்துரைநாடாளுமன்ற நிலைக்குழு, EPFO பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1,000-ஐ மத்திய அரசு உயர்த்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
और पढो »
Pongal Special Gift Pack: ரூ.1000 நேரடியாக வங்கியில் செலுத்தலாமா?Pongal Special Gift Pack: பொங்கல் பண்டிகையை ஒட்டி பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு உடன் ரூ.1000 ரொக்கமாக வழங்கப்படும் நிலையில், அதை ஏன் உரிமைத்தொகையை போல் நேரடியாக வங்கியிலேயே செலுத்துவதில்லை என பலரும் கேள்வியெழுப்பினர். பொங்கல் சிறப்பு தொகுப்புடன் வழங்கப்படும் ரூ.1000 ரொக்கத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தினால், மக்களுக்கு நேரத்திய நன்மை கிடைக்கும்
और पढो »
