PPF முதலீட்டின் மூலம் ஆண்டுக்கு ரூ.18 லட்சத்திற்கும் அதிகமான வரி இல்லாத வருமானத்தை எவ்வாறு பெறலாம் என்பதை அறிந்து கொள்வோம்.
Public Provident Fund : ரிஸ்க் ஏதும் இல்லாமல் நல்ல வருமானத்தைப் பெற விரும்பும் முதலீட்டாளர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி நல்ல தேர்வாக இருக்கும். PPF முதலீட்டின் மூலம் ஆண்டுக்கு ரூ.18 லட்சத்திற்கும் அதிகமான வரி இல்லாத வருமானம் .
Drumstick Benefitsரிலேஷன்ஷிப் குறித்து மனம் திறந்து பேசிய கயாடு லோஹர்...ரசிகர்களிடையே டிரெண்டிங்!பொது வருங்கால வைப்பு நிதி என்பது அரசு வழங்கும் நீண்ட கால சேமிப்புத் திட்டமாகும். இதில் கூட்டு வட்டி வருமானம் கிடைப்பதால், பணத்தை பன்மடங்காக்கும் சிறந்த திட்டமாக உள்ளது. குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் இதில் முதலீடு செய்ய வேண்டும். இந்த திட்டத்திற்கான, வட்டி விகிதம் இந்திய அரசாங்கத்தால் காலாண்டுக்கு ஒருமுறை நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது ஆண்டுக்கு 7.1 சதவீதமாக உள்ளது. அந்த வகையில், PPF முதலீட்டின் மூலம் ஆண்டுக்கு ரூ.18 லட்சத்திற்கும் அதிகமான வரி இல்லாத வருமானத்தை எவ்வாறு பெறலாம் என்பதை அறிந்து கொள்வோம். அதாவது, மாதம் தோறும் 1.5 லட்சம் பென்ஷன் பெறலாம்.PPF என்பது நிலையான சேமிப்பை ஊக்குவிக்க வடிவமைக்கப்பட்ட நீண்ட கால, சேமிப்புத் திட்டமாகும். PPF திட்டத்தில் 15 ஆண்டுகள் தொடர்PPF திட்டத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகள்2. வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ் வரிச் சலுகைகள் கிடைக்கும். இது தவிர, முதிர்வு நேரத்தில் அதாவது, முதிர்ச்சியின் போது கைக்கு வரும் முழுத் தொகையும் வருமான வரியின் வரம்பிற்கு உட்பட்டது அல்ல. இதில் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு வரி இல்லை.4. பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் சிறார்கள் பெயரில் PPF கணக்கைத் திறக்கலாம்பொது வருங்கால வைப்பு நிதி கணக்கிற்கு ஒரு வருடத்திற்கு தேவையான குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ. 500. மறுபுறம், ஒரு வருடத்திற்கு அதிகபட்ச முதலீட்டு வரம்பு ரூ. 1.5 லட்சம்.பொது வருங்கால வைப்பு நிதி கணக்கில் முதலீடு செய்வது கவர்ச்சிகரமான வரிச் சலுகைகளை வழங்குகிறது. ஒரு வருடத்தில் ரூ. 1.5 லட்சம் வரையிலான பங்களிப்புகள் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்குகளுக்குத் தகுதியுடையவை. கூடுதலாக, உங்கள் முதலீட்டின் மூலம் கிடைக்கும் கார்பஸிலும் ஈட்டப்படும் வட்டி முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.பொது வருங்கால வைப்பு நிதி கணக்கின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் என்றாலும், சந்தாதாரர்கள் அல்லது கணக்கு வைத்திருப்பவர்கள் முதிர்வுக்கு முன், அதிலிருந்து ஓரளவுக்கு பணத்தை எடுக்கலாம். இதற்கான நிபந்ர்தனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 1. கணக்கு திறக்கப்பட்ட நாளிலிருந்து 5 ஆண்டுகள் முடிந்த பிறகு, ஒரு நிதியாண்டிற்கு ஒரு முறை பணத்தை எடுக்கலாம்.உதாரணமாக, நீங்கள் 2024-25 ஆம் ஆண்டில் உங்கள் PPF கணக்கைத் திறந்திருந்தால், 2030-31 அல்லது அதற்குப் பிறகு உங்கள் முதல் பணத்தை எடுக்கலாம். 3. முந்தைய 4வது ஆண்டின் இறுதியில் அல்லது முந்தைய ஆண்டின் இறுதியில் உள்ள இருப்பில், எது குறைவாக உள்ளதோ, அதில் 50 சதவீதம் வரை நீங்கள் பணத்தை எடுக்கலாம். உதாரணமாக, நீங்கள் 2024-25 நிதியாண்டில் பணம் எடுக்கிறீர்கள் என்றால், மார்ச் 31, 2023 அல்லது மார்ச் 31, 2024 நிலவரப்படி, எது குறைவாக உள்ளதோ, அதில் 50 சதவீதம் வரை பணத்தை எடுக்கலாம்.ஆரம்ப 15 ஆண்டு முதிர்வு காலத்தை முடித்த பிறகு, உங்கள் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கை வைப்புத்தொகைகளைச் செய்தோ அல்லது செய்யாமலோ உங்கள் கணக்கைத் தொடர நீங்கள் தேர்வு செய்யலாம்.PPF இலிருந்து ஆண்டுக்கு ரூ.18 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்ட, ஒருவர் ஒவ்வொரு ஆண்டும் ரூ.1.50 லட்ச முதலீட்டில் தொடங்கி 15 ஆண்டுகள் முதிர்வு காலம் வரை அதைத் தொடர வேண்டும். பின்னர், அதிகபட்ச வருமானத்திற்காக கணக்கை 5 - 5 ஆண்டுகள் என நீட்டிக்கலாம்.15 ஆண்டுகளில் முதலீட்டுத் தொகை ரூ.22,50,000 ஆகவும், மதிப்பிடப்பட்ட வட்டி ரூ.18,18,209 ஆகவும், மதிப்பிடப்பட்ட முதிர்வு ரூ.40,68,209 ஆகவும் இருக்கும். முதலீட்டாளர் 5 ஆண்டுகள் நீட்டிப்பு எடுத்துக்கொண்டு, முன்பு போலவே வருடத்திற்கு ரூ.1.50 லட்சம் முதலீடு செய்யலாம்.20 ஆண்டுகளில், மொத்த முதலீடு ரூ.30,00,000 ஆகவும், மதிப்பிடப்பட்ட வட்டி ரூ.36,58,288 ஆகவும், மதிப்பிடப்பட்ட கார்பஸ் ரூ.66,58,288 ஆகவும் இருக்கும். இந்த கட்டத்தில், முதலீட்டாளர் மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்து ரூ.1.50 லட்சம் முதலீடு செய்யும் நடைமுறையைத் தொடரலாம்.25 ஆண்டுகளில், மொத்த முதலீடு ரூ.37,50,000 ஆகவும், மதிப்பிடப்பட்ட வட்டி ரூ.65,58,015 ஆகவும், மதிப்பிடப்பட்ட கார்பஸ் ரூ.1,03,08,015 ஆகவும் இருக்கும்.30 ஆண்டுகளில், மொத்த முதலீடு ரூ.45,00,000 ஆகவும், மதிப்பிடப்பட்ட வட்டி தொகை ரூ.1,09,50,911 ஆகவும், மதிப்பிடப்பட்ட கார்பஸ் ரூ.1,54,50,911 ஆகவும் இருக்கும்.35 ஆண்டுகளில், மொத்த முதலீடு ரூ.52,50,000 ஆகவும், மதிப்பிடப்பட்ட வட்டி தொகை ரூ.1,74,47,857 ஆகவும், மதிப்பிடப்பட்ட முதிர்வு தொகை ரூ.2,26,97,857 ஆகவும் இருக்கும். 25வது வயதில் PPF கணக்கை தொடங்கி, 35 ஆண்டுகளுக்கு அதாவது 60 வயது வரை தொடர்ந்து முதலீடு செய்து வந்தால், கிடைக்கும் இறுதி கார்பஸான ரூ.2.25 கோடியை முதலீட்டை தொடர்ந்து, வருடத்திற்கு சுமார் 18 லட்சம் என்ற அளவில் மாதம் ரூ.1.5 லட்சத்திற்கும் குறையாமல் பென்ஷன் போன்ற வருமானம் பெறலாம். இதற்கு வரியும் இல்லை. மேலும் படிக்க | NPS: மாதம் ரூ.10,000 முதலீட்டில்... மாதம் ரூ.1.5 லட்சம் பென்ஷன் தரும் சூப்பர் திட்டம் மேலூம் படிக்க | 8வது ஊதியக்குழு:ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் அடிப்படையில் ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? முழு கணக்கீடு இதோ உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!EPFO pension hikeE Shram Card E-Shram Card: தொழிலாளர்களுக்கான அரசாங்க ஓய்வூதிய திட்டம், மாதம் ரூ.3,000 ஓய்வூதியம்..இப்படி விண்ணப்பிக்கலாம்Unified Digital ID System: புதிய அரசாங்க போர்டல்... Aadhaar, PAN, Voter ID அனைத்தையும் ஒரே இடத்தில் அப்டேட் செய்யலாம்Jason SanjayReheating Foodஉணவு - நீர் மூலம் உடல் நுழையும் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள்... மூளையை பாதிக்கும் ஆபத்து
Public Provident Fund Tax Free Monthly Pension How To Earn More Than Rs 2 Crore Through Public P How To Invest In Ppf Provident Fund Ppf Account Investment Tips In Tamil Investment Tips Ppf Maturity Calculator Ppf Public Provident Fund Ppf Account Interest On Ppf Power Of Compounding Investment Money Personal Finance Deposit Business News In Tamil பிபிஎஃப் பொது வருங்கால வைப்பு நிதி முதலீடு வட்டி வட்டி வருமானம் வருமானம் கோடீஸ்வரர் டெபாசிட் தொகை டெபாசிட் பிபிஎஃப் கணக்கு
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு குட் நியூஸ்..! ரூ.50 லட்சம் பெறலாம்Tamil Nadu Government : திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆடு, மாடு, கோழி பண்ணை அமைக்க அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை கடனுதவி பெறலாம்.
और पढो »
NPS முதலீடு... 55வது வயதில் கையில் ரூ.3.7 கோடி... மாதா மாதம் ரூ.85,000 பென்ஷனும் உண்டுதேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) என்பது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) மற்றும் மத்திய அரசின் கீழ் இயங்கும் ஒரு தன்னார்வ அடிப்படையிலான நீண்ட கால முதலீட்டுத் திட்டமாகும்.
और पढो »
மத்திய அரசு திட்டத்தில் வீடு கட்ட சூப்பர் வாய்ப்பு, ரூ.2.50 லட்சம் மானியம்..!!PM Awas Yojana : மத்திய அரசின் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டுவதற்கான அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
பென்ஷன் இல்லையா... வாழ்நாள் முழுவதும் மாதம் ரூ.49,000 வரி இல்லா வருமானம் பெற உதவும் PPF முதலீடுPPF: பொது வருங்கால வைப்பு நிதி முதலீடு மூலம், வாழ்நாள் முழுவதும் மாதம் ரூ.49,000 என்ற அளவில் வரி இல்லாத வருமானத்தை எவ்வாறு பெறலாம் என்பதை எளிய கணக்கீட்டின் மூலம் இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
और पढो »
Mutual Funds: மாதம் ரூ.5000 SIP முதலீடு போதும்.... 48 வயதில் கையில் ரூ.1.03 கோடி இருக்கும்மியூச்சுவல் ஃபண்டுகளில் SIP அதாவது முறையான முதலீட்டுத் திட்டம் மூலம், ஒவ்வொரு மாதமும் சிறிய தொகைகளை முதலீடு செய்வதன் மூலம் உங்கள் கனவை எளிதில் நனவாக்கலாம். நீண்ட கால முதலீடுகள் மூலம் கோடிகளில் நிதியை உருவாக்கலாம்.
और पढो »
EPS Pension: ரூ.50,000 அடிப்படை ஊதியம், 25 ஆண்டு சர்வீஸ்... ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கீடு இதோEPS Pension Calculator: இந்த பதிவில் ஒரு உதாரணத்தின் மூலம் தனியார் துறை ஊழியர்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியம் பற்றி புரிந்துகொள்ளலாம். ஒருவரது அடிப்படை சம்பளம் மாதம் ரூ.50,000 என்று வைத்துக்கொள்வோம்.
और पढो »




